உலகின் வாஞ்சையான / Ulagin Vaanjaiyaana / Ulagin Vanjaiyana
1
உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி இயேசுவே
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதென்ன
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது
2
நீர் சேர்கையில் களிக்கும்
சீயோன் கிளைகளை
வழியிலே தெளிக்கும்
நான் உமதுண்மையை
சங்கீதத்தால் துதிப்பேன்
மகிழ்ச்சியுடனே
நான் உம்மைத் தோத்திரிப்பேன்
மா வல்ல கர்த்தரே
3
நான் நன்மையான ஏதும்
இல்லாத தீயோனாய்
நிர்ப்பந்தம் பயம் நோவும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்
உம்மை என் மீட்புக்காக
வெளிப்படுத்தினீர்
4
கட்டுண்டு நான் கிடந்தேன்
என் கட்டை அவிழ்த்தீர்
மா சாபத்தைச் சுமந்தேன்
நீர் அதை நீக்கினீர்
நீர் என்னை மேன்மையாக்கி
என் ஆத்துமத்திலே
இன்ப நிறைவுண்டாக்கி
ரட்சிக்க வந்தீரே
5
வியாகுலம் அடைந்த
நரரின் கூட்டமே
இக்கட்டினால் நிறைந்த
நிர்ப்பந்த மாந்தரே
இதோ! சகாயர் வந்தார்
கர்த்தர் கெட்டோருக்கு
இரட்சகரைத் தந்தார்
அதால் மகிழ்ந்திரு
6
நெஞ்சே துன்மார்க்கருக்கும்
பகைஞர் உனக்கு
உண்டாக்கும் துன்பத்துக்கும்
பயப்படாதிரு
உன் மீட்பர் ராஜாவாக
வருகிறாரல்லோ
அவருக்கு முன்பாக
பேய்க் கூட்டம் நிற்குமோ
7
பொல்லாதவர்களுக்கு
அநந்த துக்கமும்
நல்லோரின் கூட்டத்துக்கு
அநந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவாரே
ஆம் எங்கள் மீட்புக்காக
நீர் வாரும் இயேசுவே