தெய்வன்பின் வெள்ளமே / Theivanbin Velame / Deivanbin Vellame / Deivanpin Vellame
1
தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
ஐயா நின் அடி பணிந்தேன்
2
மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்
3
சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்
4
பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்
கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
யாவும் பொறுத்த நாதா
5
ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்
6
மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
மகிமையோ வருங்காலமோ
பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை