என்னுடைய சாவின் சாவே / Ennudaya Saavin Saave / Ennudaiya Saavin Saave
1
என்னுடைய சாவின் சாவே
என் உயிரின் ஜீவனே
என்னை மீட்க நீர் கர்த்தாவே
தெய்வ கோபத் தீயிலே
பாய்ந்து மா அவஸ்தையாக
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
2
கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே
உம்மைத் தீயோர் துஷ்டத்துக்கு
நீரே தெய்வமைந்தனே
சூறையிட்டு கள்ளனாக
கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
3
நான் சுகிக்க நீர் இக்கட்டு
துன்பம் வாதை நோவிடர்
குட்டறை பொல்லாப்பும்பட்டு
வாரடியும் பட்டவர்
ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
4
ஜீவ கிரீடம் நான் தரித்து
வாழவும் உயரவும்
தூஷண மெல்லாம் சகித்து
நிந்தை துப்புதலையும்
ஏற்றுக்கொண்டு எண்ணமற்ற
முள் முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
5
நான் நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே
சுய தேகத்தைப் பாராமல்
வாதிப்பாரின் இச்சைக்கே
அதைவிட்டு கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
6
என் அநியாயத்தைக் கழித்து
என்னை மீட்டுவிடவே
நோவு யாவும் உத்தரித்து
நல்ல மனதுடனே
ரத்தம் சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
7
உம்முடைய பணிவாலே
என் இடும்பின் ஆக்கினை
உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
தீரும் உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு
உமக்காயிரம் தரம்
இயேசுவே சங்கீர்த்தனம்
8
இயேசுவே நீர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
ஜீவன் போகுமளவாக
பட்ட பாடனைத்துக்கும்
என்ன சொல்வேன் எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன்
என்றென்றைக்கும் போற்றுவேன்
என்னுடைய சாவின் சாவே / Ennudaya Saavin Saave / Ennudaiya Saavin Saave
