தூயர் ராஜா எண்ணிறந்த / Dhooyar Raajaa Ennirandha / Dhooyar Raja Ennirandha / Thooyar Raajaa Ennirantha / Thooyar Raja Ennirantha
1
தூயர் ராஜா எண்ணிறந்த
வான்மீன் சேனை அறிவீர்
மாந்தர் அறியா அநேகர்
உம்மைப் போற்றப் பெறுவீர்
எண்ணரிய பக்தர் கூட்டம்
லோக இருள் மூடினும்
விண்ணின் ராஜ சமுகத்தில்
சுடர்போல விளங்கும்
2
அந்தக் கூட்டத்தில் சிறந்த
ஓர் அப்போஸ்தலனுக்காய்
நாங்கள் உம்மைத் துதிசெய்வோம்
வருஷா வருஷமாய்
கர்த்தர்க்காக அவன் பட்ட
நற் பிரயாசம் கண்டதார்
பக்தரின் மறைந்த வாழ்க்கை
கர்த்தர்தாமே அறிவார்
3
தாசரது ஜெபம் சாந்தம்
பாடு கஸ்தி யாவுமே
தெய்வ மைந்தன் புஸ்தகத்தில்
தீட்டப்பட்டிருக்குமே
இவை உந்தன் பொக்கிஷங்கள்
நாதா அந்த நாளிலும்
உம் சம்பத்தை எண்ணும்போது
எண்ணும் அடியாரையும்