நீர் வேண்டும் இயேசுவே / Neer Vendum Eyesuve / Neer Vendum Yesuve / Neer Vendum Yesuvae
மாலை நீங்கும் நேரம்
உம்மை காண நானும்
இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன்
கடலின் சீறும் அலைகள்
கரையில் சேரும் இடத்தில்
இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன்
1
பகலும் போனால் என்ன
இருளும் சூழ்ந்தால் என்ன
இயற்கை தீண்டினால் என்ன
அச்சம் நேர்ந்தால் என்ன
நீர் வேண்டும்
என்றும் என்னோடு வேண்டும்
உந்தன் அன்பு
என்றும் மாறாது
நீர் வேண்டும்
என்றும் என்னோடு வேண்டும்
உந்தன் அன்பு
சூழ்நிலையை கரைத்திடும்
2
மனிதன் போனால் என்ன
கைகள் விரித்தால் என்ன
நினைவுகள் வாயினால் என்ன
இமைகள் நனைந்தால் என்ன
நீர் வேண்டும்
என்றும் என்னோடு வேண்டும்
உந்தன் அன்பு
என்றும் மாறாது
நீர் வேண்டும் இயேசுவே
என்றும் என்னோடு வேண்டும்
உந்தன் அன்பு
சூழ்நிலையை கரைத்திடும் என்
சூழ்நிலையை கரைத்திடும் என்
சூழ்நிலையை கரைத்திடும்