நான் எங்கே ஓடுவேன் / Naan Enge Oduven / Naan Engae Oduvaen
1
நான் எங்கே ஓடுவேன்
மா பாதகனானேன்
தீட்பெங்கும் என்னை மூடும்
யார் ஆத்ரிக்கக் கூடும்
என் திகில் லோகத்தார்கள்
அனைவரும் நீக்கார்கள்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
2
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
என் மனமும்மைப் பற்றும்
என் கிலேசமும் இக்கட்டும்
தணிய தயவாகத்
திடன் அளிப்பீராக
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
3
என் பாவத்தால் உண்டாம்
விசாரத்தோ டெல்லாம்
நான் எனக்காய் மடிந்த
உம்மண்டையே பணிந்த
ஜெபத்தியானமாக
வந்தேன் ரட்சிப்பீராக
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
4
சிந்துண்ட உம் வல்ல
இரத்தத்தால் எல்லா
அழுக்கும் என்னில் வாங்கும்
என் நோயில் என்னைத் தாங்கும்
கடலின் ஆழமட்டும்
என் பாவங்கள் விழட்டும்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
5
என் ஆறுதல் நீரே
உம்மால் மீட்பாயிற்றே
என் தீட்பெல்லாம் மறைய
நீர் அதை உம்முடைய
குழியிலே அடைத்தீர்
அங்கே அதைப் புதைத்தீர்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
6
என் குற்றம் பெரிது
ஆனாலும் உமது
இரத்தமும் பலியும்
பலிப்பதால் கழியும்
உம்மண்டை வந்து சேரும்
எல்லாரின் நெஞ்சுந் தேறும்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
7
ஆ ஸ்வாமீ உம்முட
இரத்தம் சருவ
உலகையும் ரட்சித்து
பேய் வாய்க்குந் தப்புவித்து
எக்கேட்டையுந் தடுக்கும்
பலத்தைப் பெற்றிருக்கும்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
8
இப்போதும் உம்மையே
நான் சார்ந்தேன் இயேசுவே
துக்கித்தும்மண்டை வந்தேன்
உம்மால் மன்னிப்பைக் கண்டேன்
நான் நரகத்தைக் காணேன்
நான் ஜீவனுக்குள்ளானேன்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே
9
இனி நான் உம்மிலே
பிரிதலின்றியே
நிலைத்து வளர்ந்தேற
அவயவமாய்த் தேற
நீர் என்னைச் சாவுமட்டும்
நல்லாவியால் நடத்தும்
அன்புள்ள இயேசுவே
வா என்று சொன்னீரே