வாசல்களை உயர்த்துங்கள் / Vaasalgalai Uyarththungal / Vaasalgalai Uyarthungal / Vasalgalai Uyarththungal / Vasalgalai Uyarthungal
1
வாசல்களை உயர்த்துங்கள்
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்
பெரிய தெய்வ மைந்தனார்
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி தயாபரா
ஆலோசனைக் கர்த்தா
2
அவர் மா சாந்தமானவர்
சகாயர் நீதியுற்றவர்
ராஜாவின் முடி சுத்தமே
அவர் செங்கோல் இரக்கமே
இக்கட்டை நீக்கினார் அன்பாய்
புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்
துதி மா கர்த்தரே
பலத்த மீட்பரே
3
இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும்
போதெந்த ஊரும் தேசமும்
களிக்கும் எங்கள் இதயம்
அடைவதும் மெய்ப் பாக்கியம்
அவர் சந்தோஷப் பொழுதே
மகிழ்ச்சியை அளிப்பாரே;
ஆ தேற்றும் உமக்கே
புகழ்ச்சி கர்த்தரே
4
வாசல்களை உயர்த்துங்கள்
நெஞ்சை அலங்கரியுங்கள்
பக்தியின் குருத்தோலையும்
மகிழ்ச்சியின் கிளைகளும்
தெளியுங்கள் ராஜா வாறார்
உங்களையும் இரட்சிப்பார்
கர்த்தாவுக் கென்றைக்கும்
புகழ்ச்சி துதியும்
5
என்னண்டை இயேசு வாருமேன்
என் வாசலைத் திறக்கிறேன்
அருள் புரியும் தேவரீர்
என் நெஞ்சில் தங்கக்கடவீர்
மோட்ச வழியைக் காண்பிக்கும்
நல் ஆவியைத் தந்தருளும்
என்றைக்கும் உமக்கே
புகழ்ச்சி கர்த்தரே