வாஞ்சைப்பட்ட இயேசுவே / Vaanjaippatta Yesuve
1
வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா
கொஞ்ச நாள்தான் தங்கினீர் அல்லேலூயா
பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா
2
வான ஆசனத்திலே அல்லேலூயா
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா
பூதலத்தை மறவீர் அல்லேலூயா
3
திருக்கரம் குவித்து அல்லேலூயா
திருக்காயம் காண்பித்து அல்லேலூயா
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா
மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லுலூயா
4
மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா
வான லோகம் போயினும் அல்லேலூயா
எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா
