உம்மைக் காணாமல் | Ummai Kaanaamal

உம்மைக் காணாமல் | Ummai Kaanaamal

உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா
எந்நாளும் என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே

உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

1
மானைப் போல் நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போலவே
மானைப் போல் நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போலவே

என் ஆத்துமா என் ஆத்துமா
பரலோக தேவனை வாஞ்சிக்குதே
என் ஆத்துமா என் ஆத்துமா
பரலோக தேவனை வாஞ்சிக்குதே

பரலோக தேவனை வாஞ்சிக்குதே
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

2
எப்பக்கம் போனாலும் உம் நினைவே
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
எப்பக்கம் போனாலும் உம் நினைவே
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன்

என் தேவனே என் தேவனே
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
என் தேவனே என் தேவனே
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே

என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

3
வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
ஜீவத்தண்ணீரை ஊற்றுமைய்யா
வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
ஜீவத்தண்ணீரை ஊற்றுமைய்யா

ஜீவநதி பாயட்டுமே எந்நாளுமே
எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே
ஜீவநதி பாயட்டுமே எந்நாளுமே
எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே

எந்நாளுமே உம்மில் வாழ்ந்திடவே
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

4
கணுக்கால் அளவு போதாதைய்யா
முழங்கால் அளவும் போதாதைய்யா
கணுக்கால் அளவு போதாதைய்யா
முழங்கால் அளவும் போதாதைய்யா

மூழ்கணுமே மூழ்கணுமே
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே
மூழ்கணுமே மூழ்கணுமே
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே

பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே

உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா
எந்நாளும் என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே

உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா

உம்மைக் காணாமல் | Ummai Kaanaamal | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!