லோக நாதா மண்ணோர் மீள / Loga Naadhaa Mannor Meela / Loga Naathaa Mannor Meela / Loga Nadha Mannor Meela / Loga Natha Mannor Meela
1         
லோக நாதா மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர்
நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும்
தயவாகத் தேவரீர்
எண்ணிறந்த நன்மை சற்றும்
கைமாறின்றி ஈகிறீர்
2        
உந்தன் நேசக் காந்தியாலும்
எங்கள் நெஞ்சுருகியே
அன்பில்லாத தன்மை யாவும்
நீங்கச்செய்யும் இயேசுவே
அதால் நாங்கள் ஏற்பதிலும்
ஈதல் நன்றென்றுணர்வோம்
நீரே தந்த ஆஸ்தியிலும்
தான தர்மம் செய்குவோம்
3        
சிறியோர்க்குச் செய்த நன்மை
உமக்கிட்ட தர்மமே
என்றந்நாள் நீர் சொல்லும் வாக்கை
கேட்பதின்ப பாக்கியமே
சொத்து செல்வம் ஏதும் அற்ற
எளியோரால் தேவரீர்
தான தர்மம் கேட்பதாக
இதினாலே போதித்தீர்
4        
லோக நாதா மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர்
உம்மை அண்டிப் பற்றிக்கொள்ள
நம்பிக்கை விஸ்வாசமும்
மா சிறந்த மேன்மையுள்ள
திவ்விய அன்பும் ஈந்திடும்
