கிறிஸ்தவ இல்லறமே / Kiristhava Illarame / Kiristhava Illaramae

கிறிஸ்தவ இல்லறமே / Kiristhava Illarame / Kiristhava Illaramae

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்
கிருபை செய்வீர் பரனே

பரிசுத்த மரியன்னை பாலன் யேசு யோசேப்புப்
பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்
கிருபை செய்வீர் பரனே

1
ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்
சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும்

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்
கிருபை செய்வீர் பரனே

2
ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல
நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக்

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்
கிருபை செய்வீர் பரனே

3
அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்
அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்
துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்
கிருபை செய்வீர் பரனே

4
மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று
கலைஉடை உணவிலும் கல்வி முயற்சியிலும்
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக்

கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக்
கிருபை செய்வீர் பரனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!