இவ்வுயர் மலைமீதினில் / Ivvuyar Malaimeedhinil / Ivvuyar Malaimeethinil
1
இவ்வுயர் மலைமீதினில்
எம் நாதா உந்தன் பாதத்தில்
எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம் தாசர் பூர்வ பக்தராம்
சீனாய் மலைமேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை
தீ காற்று கம்பம் கண்டோனை
மா மென்மை சத்தம் கேட்டோனை
2
இவ்வுயர் மலை மீதிலே
எம் நாதர் சீஷர் மூவரே
கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து
இடி முழக்க மக்களாம்
கடிந்த பேச்சு யாக்கோபாம்
‘அன்பே கடவுள்’ போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்
3
இவ்வுயர் மலைமீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்
பரமன் ஜோதி தோன்றிடும்
பகலோன் ஜோதிமாய்த்திடும்
மா தூய ஆடை வெண்மையே
ஆ மாந்தர் காணா விந்தையே
நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே
4
இவ்வுயர் மலைமீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்
மா இருள் மேகம் மூடினும்
மா ஜோதி பார்வை வாட்டினும்
காண்போமே தெய்வ மைந்தனை
கேட்போமே தெய்வ வார்த்தையை
‘இவர் என் நேச மைந்தனார்
இவர்க்குச் செவிகொடுப்பீர்’