இவரே பெருமான் / Ivare Perumaan / Ivare Peruman
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
1
கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
பவவினை யாதுமே தெரியார் இப்
புவனமீது நமக்குரியார்
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
2
குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம்
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
3
பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
4
அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
5
அலகை தனை ஜெயித்த வீரன் பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
6
பொன்னுலகத் தனில்வாழ் யோகன் அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன்
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான் இவரே பெருமான்
