இதோ உன் நாதர் செல்கின்றார் / Idho Un Naadhar Selgindraar / Itho Un Naadhar Selgindraar / Idho Un Naadhar Selkindraar / Itho Un Naadhar Selkindraar / Idho Un Nadhar Selgindrar / Itho Un Nadhar Selgindrar / Idho Un Nadhar Selkindrar / Itho Un Nadhar Selkindrar
1
இதோ உன் நாதர் செல்கின்றார்
உன்னை அழைக்கும் அன்பைப் பார்
‘வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்’
என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய்
2
துன்பத்தில் உழல்வோனே நீ
மோட்சத்தின் வாழ்வைக் கவனி
பற்றாசை நீக்கி விண்ணைப் பார்
இதோ உன் நாதர் செல்கின்றார்
3
அவ்வழைப்பை இப்பக்தன் தான்
கேட்டே செல்வத்தை வெறுத்தான்
சீர் இயேசுவின் சிலுவைக்காய்
எல்லாம் எண்ணினான் நஷ்டமாய்
4
நாடோறும் என் பின் செல் என்னும்
அழைப்பு அவன் நெஞ்சிலும்
உற்சாகத்தோடுழைக்கவே
திட சித்தம் உண்டாக்கிற்றே
5
நாடோறும் நம்மை நாதர் தாம்
அழைத்தும் தாமதம் ஏனாம்
ஏன் மோட்ச வாழ்வைத் தள்ளுவோம்
ஏன் லோக மாயை நாடுவோம்
6
மத்தேயு பக்தன் போலவும்
எல்லாம் வெறுத்து நாங்களும்
நல் மனதோடு உம்மையே
பின்பற்ற ஏவும் கர்த்தரே