எவ்வண்ணமாக கர்த்தரே / Evannamaaga Karththare / Evannamaaga Karthare
1
எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்
2
அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ
3
பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே
4
நான் குற்றவாளி ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே
5
ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்
6
இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்
7
இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்