என் பாத்திரம் நிரம்பி / En Paaththiram Nirambi

என் பாத்திரம் நிரம்பி / En Paaththiram Nirambi

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

1
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்

ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்

நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம்

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

2
ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்

துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்

அலங்காரமாக்கிடுவேன் சபையை
அலங்காரமாக்கிடுவேன் சபையை

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

3
கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்
கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்

இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை என்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை

விருந்தும் மருந்தும் நானே சபைக்கு
விருந்தும் மருந்தும் நானே சபைக்கு

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

4
முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு

காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்

விடுதலை பறைசாற்றுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

5
அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்

சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்

அதிசயம் தினம் காண்பேன்
அதிசயம் தினம் காண்பேன்

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!