என் ஜீவன் போகும் நேரம் / En Jeevan Pogum Neram
1
என் ஜீவன் போகும் நேரம்
சமீபம் வந்ததே
பேரின்ப அருணோதயம்
இதோ விடிந்ததே
ராக் கால மோசம் நீங்கும்
விண் சுடரொளியில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்
2
ஆ நேச ஜீவ ஊற்று
என் அருள் நாதரே
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்
அங்காழி போலாமே
பேரன்பின் பெருவெள்ளம்
பாய்ந்தோடும் மோட்சத்தில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்
3
அன்போடும் நீதியோடும்
என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து
வந்தார் எந்நேரமும்
ஆ போற்றுவேன் தெய்வன்பை
ஆனந்த கடலில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்
4
நல் நித்திரை செய்து பின்பு
மாசற்றெழும்புவேன்
என் மீட்பரை நான் கண்டு
ஆனந்தம் அடைவேன்
ராஜாதி ராஜன் என்னை
அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்
5
தன் ஆடையைப் பாராமல்
பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு
நான் ஜீவ கீரிடத்தை
நோக்காமல் மீட்பர் மாண்பை
பார்ப்பேன் அவ்வேளையில்
இம்மானுவேலே ஜோதி
பேரின்ப தேசத்தில்