எல்லாம் சிஷ்டித்த நமது / Ellam Sishtiththa Namadhu / Ellam Sishtitha Namadhu / Ellam Sishtiththa Namathu / Ellam Sishtitha Namathu
1
எல்லாம் சிஷ்டித்த நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக
அல்லேலுயா மகத்துவம்
பலம் புகழ்ச்சி தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
பார்ப்பார் காப்பார்
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்
2
மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக
அல்லேலுயா புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக
பாவம் சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்
என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்
3
மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து நேர்த்தியாக
சிங்காரிக்கும் தேவாவிக்கும்
அல்லேலுயா புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக
வான ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும்
தேற்றிவாறார்
அதின்முன் ருசியைத் தாறார்
4 எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமரன் ஆவிக்கும்
அநந்த காலமாக
அல்லேலுயா மகத்துவம்
பலம் புகழ்ச்சி தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
ஆமேன் ஆமேன்
நீர் அநந்தம் ஆதியந்தம்
பரிசுத்தம்
பரிசுத்தம் பரிசுத்தம்
ஆமேன்
