அருள் நாதா நம்பி வந்தேன் / Arul Naadhaa Nambi Vandhen / Arul Nadha Nambi Vandhen / Arul Naathaa Nambi Vanthen / Arul Natha Nambi Vanthen
1
அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்
2
தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்
3
தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்
4
துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்
5
சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்
6
இயேசு நாதா நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே
அருள் நாதா நம்பி வந்தேன் / Arul Naadhaa Nambi Vandhen / Arul Nadha Nambi Vandhen / Arul Naathaa Nambi Vanthen / Arul Natha Nambi Vanthen