பாரீர் கெத்சமனே / Paareer Gethsamanae / Pareer Gethsemane

பாரீர் கெத்சமனே / Paareer Gethsamanae / Pareer Gethsemane

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

1
தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்

தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காயே
தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காயே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

2
அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்

எப்படிம் உம் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே
எப்படிம் உம் சித்தம் செய்ய என்னைத்
தத்தம் செய்தேன் என்றாரே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

3
இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்ததே
இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்ததே

இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

4
மும்முறை தரை மீதே
தாங்கொண்ணா வேதனையால்
மும்முறை தரை மீதே
தாங்கொண்ணா வேதனையால்

முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகன் மீட்புறவே
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

5
அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர்
அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர்

துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நொந்து அலறுகின்றார்

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

6
என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மா நேசத்தை
என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மா நேசத்தை

எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே

பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

பாரீர் கெத்சமனே / Paareer Gethsamanae / Pareer Gethsemane | J. Jeyakumar / El-Shaddai Ministries, Surandai, Tenkasi, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!