ஆதியில் இருளை / Aadhiyil Irulai / Aathiyil Irulai
1
ஆதியில் இருளை
அகற்றி ஒளியை
படைத்த நீர்
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே
பிரகாசிப்பீர்
2
நற்சீராம் சுகத்தை
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்
3
சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல் பறந்தே
பார் இருள் நீக்கியே
பிரகாசிப்பீர்
4
ஞானமும் வன்மையும்
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்
பரம்பும் வண்ணமாய்
பிரகாசிப்பீர்
