கண் கலங்காமல் / Kan Kalangaamal

கண் கலங்காமல் / Kan Kalangaamal

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

1
ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரையா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது
மகிமையின் கிரீடம் என்தலைமேல்

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

2
நோவா நடந்ததால் உம்கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லி
வெள்ளத்தில் இருந்து காத்தீரையா

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

3
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சினேகிதன் என்றழைத்தீர்
செய்யப் போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

4
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர்

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

5
நறுமணம் வீசும் காணிக்கையாய்
பலியாகி அன்பு கூர்ந்தீர்
அதுபோல நானும் அர்ப்பணித்தேன்
அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

6
ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்
பிறர் அன்பில் நான் வளர்வேன்
உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி
தூய்மை படுத்தும் நிச்சயமே

உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!