இயேசுவே நான் நீர் பட்ட / Yesuve Naan Neer Patta / Yesuvae Naan Neer Patta

இயேசுவே நான் நீர் பட்ட / Yesuve Naan Neer Patta / Yesuvae Naan Neer Patta

1   
இயேசுவே நான் நீர் பட்ட
பாடும் வேதனையும்
கருத்தாய்த் தியானிக்க
உமதாவியையும்
பக்தியையும் தயவாய்
தந்தென் மீட்புக்காக
வதையுண்ட ரூபமாய்
என்முன் நிற்பீராக

2   
நீரே பட்ட துயரம்
ரத்த வேர்வை கட்டு
குட்டுமிழ்நீர் தூஷணம்
வாரடி இக்கட்டு
சிலுவையின் மரணம்
பாடெல்லாவற்றையும்
அடியேனின் இதயம்
உற்றுப் பார்த்தசையும்

3   
இயேசுவே நான் உத்தம
மனஸ்த்தாபமுற்று
தேவரீரை வாதித்த
பாவத்தை வெறுத்து
நீக்க எனக்கன்பினால்
துணைசெய்து வாரும்
மீண்டும் உம்மைப் பாவத்தால்
வாதிக்காமல் காரும்

5   
பாவம் மனச் சாட்சியைக்
குத்தி தீக்காடாக
எரியும் நரகத்தை
காட்டும்போதன்பாக
துணைநின்றென் நெஞ்சிலே
உம்மைப் பற்றிக்கொள்ளும்
விசுவாசத்தை நீரே
தந்து திடன் சொல்லும்

6   
நான் என் சிலுவையையும்
களிப்பாய்ச் சுமந்து
தாழ்மை பொறுமையையும்
உம்மால் கற்றுவந்து
உம்மைப் பதில் நேசிக்க
உதவும்; நான் சொல்லும்
ஏழைத் துதி உம்முட
செவிசாய்த்துக் கொள்ளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!