வானம் பூமி யாவற்றிலும் / நான் நம்புவேன் நான் நம்புவேன் | Vaanam Boomi Yaavatrilum / Vaanam Bhoomi Yaavatrilum / Naan Nambuven Naan Nambuven
1
வானம் பூமி யாவற்றிலும்
இயேசு மேலானவர்
மனிதர் தூதர் பேய்தானும்
அவர் முன் வீழுவர்
நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
2
இரட்சகர் உயிர் விட்டதும்
எந்தனுக்காகவே
வெறெந்த மாமன் றாட்டுக்கும்
அங்கிட மில்லையே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
3
பாவத்தின் மாளும் யாவர்க்கும்
உயிரளிக்குமே
பெலனற்ற ஆத்மாவுக்கும்
சக்தி கொடுக்குமே
நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
4
லோகம் இவ்வன்பின் மாட்சிமை
ருசித்துப் பார்க்காதோ
மீட்ப ருதிர வல்லமை
வந்து சோதியாதோ
நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
5
என் மரணப் படுக்கையில்
யேசென்ற நாமத்தை
பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
அடைவேன் நித்திரை
நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
வானம் பூமி யாவற்றிலும் / நான் நம்புவேன் நான் நம்புவேன் | Vaanam Boomi Yaavatrilum / Vaanam Bhoomi Yaavatrilum / Naan Nambuven Naan Nambuven | Sharon