உன்னையன்றி வேறே கெதி / Unnaiandri Vere Gedhi / Unnaiyandri Verae Kethi / Unnai Andri Vere Kethi

உன்னையன்றி வேறே கெதி / Unnaiandri Vere Gedhi / Unnaiyandri Verae Kethi / Unnai Andri Vere Kethi

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ

அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா ஆசை என் யேசு ஸ்வாமீ

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ

1
பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோதான்
கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ

2
அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வாஞ்சகண் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து க்ருபைவை யேசு ஸ்வாமீ

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ

3
எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்கவை யேசு ஸ்வாமீ

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ

4
கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமீ

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!