உன்னை பேர் சொல்லி | Unnai Peyar Solli
உன்னை பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
என்றும் நான் உன்னோடு இருப்பேன்
நீ பரதேசியாய் தங்கும் இடத்தை
சுதந்தரிக்கும்படியாக செய்வேன்
நான் தனிமை என்று புலம்பாதே
துணையாக தினமும் வருவேன்
உன்னை பழுகவும் பெருகவும் பண்ணி
பலத்த ஜனமாக்கிடுவேன்
உன் சந்ததி பூமியின் தூள் போல
பெருகிடும் என்று வாக்கு தந்தேன்
உனக்கு தந்திட்ட வாக்கினை
நிறைவேற்றும் வரையிலும்
உன்னை விட்டு விலக மாட்டேன் நான்
உன்னை என்றும் மறக்க மாட்டேன்
உன்னை பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
என்றும் நான் உன்னோடு இருப்பேன்
நீ பரதேசியாய் தங்கும் இடத்தை
சுதந்தரிக்கும்படியாக செய்வேன்
1
இருளின் பயங்கள் சூழ்ந்திட்டதோ
போகும் பாதையும் தெரியலையோ
இருளின் பயங்கள் சூழ்ந்திட்டதோ
போகும் பாதையும் தெரியலையோ
நீ படுத்திருக்கும் பூமியை
உனக்கும் உன் சந்ததிக்கும்
சுதந்திரமாய் தருவேன்
நீ யாருக்கு பயந்து ஓடி ஒளிந்தாயோ
அவர் முன்னே உயர்த்திடுவேன்
நீ படுத்திருக்கும் பூமியை
உனக்கும் உன் சந்ததிக்கும்
சுதந்திரமாய் தருவேன்
நீ யாருக்கு பயந்து ஓடி ஒளிந்தாயோ
அவர் முன்னே உயர்த்திடுவேன்
நீ ஒருபோதும் கலங்காதே மகனே
உன்னை விட்டு விலகமாட்டேன்
நீ ஒருபோதும் கலங்காதே மகளே
உன்னை விட்டு விலகமாட்டேன் நான்
உன்னை கைவிடவுமாட்டேன்
உன்னை பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
என்றும் நான் உன்னோடு இருப்பேன்
நீ பரதேசியாய் தங்கும் இடத்தை
சுதந்தரிக்கும்படியாக செய்வேன்
2
அடியில் வேர் பற்றி பரம்பிடுவாய்
பூத்துக் காய்த்து கனி தருவாய்
அடியில் வேர் பற்றி பரம்பிடுவாய்
பூத்துக் காய்த்து கனி தருவாய்
உன்னை ஏமாற்றுக்காரனாய் உலகம் பார்த்தாலும்
கணம் பெற்ற மகனும் நீ
உன்னை தோற்றுப்போனவனாய் மனிதர் பார்த்தாலும்
போராடி வென்றவன் நீ
உன்னை ஏமாற்றுக்காரியாய் உலகம் பார்த்தாலும்
கணம் பெற்ற மகளும் நீ
உன்னை தோற்றுப்போனவளாய் மனிதர் பார்த்தாலும்
போராடி வென்றவள் நீ
யாக்கோபாய் திரிந்திட்ட உன்னை
இஸ்ரவேலாய் மாற்றினேன்
தனியாக நடந்திட்ட உன்னை
ஓர் ஜனக் கூட்டமாய் மாற்றினேன்
பல தேசங்களாய் மாற்றுவேன்
உன்னை பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
என்றும் நான் உன்னோடு இருப்பேன்
நீ பரதேசியாய் தங்கும் இடத்தை
சுதந்தரிக்கும்படியாக செய்வேன்
3
போகும் இடமெல்லாம் காத்துக் கொள்வேன்
தீமை அணுக விடமாட்டேன்
போகும் இடமெல்லாம் காத்துக் கொள்வேன்
தீமை அணுக விடமாட்டேன்
பாழாகக் கிடந்த நிலங்களை எல்லாம்
பெத்தேலாய் மாற்றிடுவேன்
நீ தூணாக நிறுத்தின கல்லுக்கு மேலாய்
சபைதனை கட்டிடுவேன்
பாழாகக் கிடந்த நிலங்களை எல்லாம்
பெத்தேலாய் மாற்றிடுவேன்
நீ தூணாக நிறுத்தின கல்லுக்கு மேலாய்
சபைதனை கட்டிடுவேன்
உன் தகப்பனின் வீட்டிற்க்கு நீயும்
சந்தோஷமாய் வருவாய்
இரட்டிப்பு நன்மைகள் பெற்றே
திருப்தியாய் திரும்பிடுவாய்
உன் தகப்பனின் வீட்டிற்க்கு நீயும்
சந்தோஷமாய் வருவாய்
இரட்டிப்பு சுதந்திரம் பெற்றே
திருப்தியாய் திரும்பிடுவாய்
நீ சந்தோசமாய் வாழ்வாய்
உன்னை பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
என்றும் நான் உன்னோடு இருப்பேன்
நீ பரதேசியாய் தங்கும் இடத்தை
சுதந்தரிக்கும்படியாக செய்வேன்
உன்னை பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
என்றும் நான் உன்னோடு இருப்பேன்
நீ பரதேசியாய் தங்கும் இடத்தை
சுதந்தரிக்கும்படியாக செய்வேன்
உன்னை பேர் சொல்லி | Unnai Peyar Solli | Edwin Raj | Alwyn M | Edwin Raj