உங்களைப் படைத்தவர் / Ungalai Padaiththavar / Ungalai Padaithavar
1
உங்களைப் படைத்தவர்
சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க
என்றும் தம்மோடிருக்க
ஆசைப்பட்டோர் உங்களை
பார்த்து என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்
திரும்புங்கள் என்கிறார்
2
உங்களை ரட்சித்தவர்
தெய்வ சுதனானவர்
திரு ரத்தம் சிந்தினார்
சிலுவையில் மரித்தார்
நீங்கள் வீணில் சாவதேன்
மரித்துங்களை மீட்டேன்
என்று கூறி நிற்கிறார்
திரும்புங்கள் என்கிறார்
3
உங்களை நேசிப்பவர்
தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார்
குணப்பட ஏவினார்
தயை பெற வாரீரோ
மீட்பைத் தேடமாட்டீரோ
என்றிரங்கிக் கேட்கிறார்
திரும்புங்கள் என்கிறார்
