தாழ்விலிருந்து கூப்பிடும் / Thaalvilirundhu Kuppidum / Thaalvilirunthu Kuppidum / Thalvilirundhu Kuppidum / Thalvilirunthu Kuppidum
1
தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தம் கேட்டன்பாக
நான் செய்கிற மன்றாட்டுக்கும்
செவி கொடுப்பீராக
கர்த்தாவே நரர் பாவத்தை
நீர் மன்னியாமல் நீதியை
பார்த்தால் யார் நிற்கக்கூடும்
2
மன்னிப்பை மாந்தன் எவனும்
தன் புண்ணியங்களாலே
அடையான் உம்மை பாவியும்
தாழ்வான மனதாலே
தேடி நம்பிக்கையுடனே
வந்தால் மா தயவாகவே
மன்னிக்கிறீர் கர்த்தாவே
3
என் மீட்பர் பேரில் சாவேன்
என் புண்ணியம் அபத்தம்
தேவன்பையே நான் நம்புவேன்
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேத வார்த்தையில்
உண்டென்பதே என் மனதில்
நன்றாய்ப் பதிப்பீராக