ஆவியை மலைபோலே ஊற்றும் / Aaviyai Malaipolae Ootrum
ஆவியை மலைபோலே ஊற்றும் / Aaviyai Malaipolae Ootrum
ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
1
அன்பினால் ஜீவனை விட்டீர் ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்
ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
2
சிதறுண்டலைகிற ஆட்டைப் பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
3
காத்திருந்த பல பேரும் மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
4
தோத்திரக் கீதங்கள் பாடி எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்