சபையோரே எல்லாரும் / சபையோரே எல்லோரும் / Sabaiyorae Ellarum / Sabaiyorae Ellorum
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
1
நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
2
கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
3
கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
4
சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம்தானே
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்