ஓர் முறை விட்டு மும்முறை / Or Murai Vitu Mummurai

ஓர் முறை விட்டு மும்முறை / Or Murai Vitu Mummurai

1
ஓர் முறை விட்டு மும்முறை
சீமோன் மறுத்தும் ஆண்டவர்
என்னிலே அன்புண்டோ என்றே
உயர்த்த பின் கேட்டனர்

2
விஸ்வாசமின்றிக் கர்த்தரை
பன்முறை நாமும் மறுத்தோம்
பயத்தினால் பலமுறை
நம் நேசரை விட்டோம்

3
சீமோனோ சேவல் கூவுங்கால்
மனம் கசந்து அழுதான்
பாறைபோல் நின்று பாசத்தால்
கர்த்தாவைச் சேவித்தான்

4
அவன்போல் அச்சங்கொள்ளினும்
நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்
பாவத்தால் வெட்கம் அடைந்தும்
கண்ணீர் சொரிந்திலோம்

5
நாங்களும் உம்மை விட்டோமே
பன்முறை மறுதலித்தும்
நீர் எம்மைப் பார்த்து இயேசுவே
நெஞ்சுருகச் செய்யும்

6
இடறும் வேளை தாங்கிடும்
உம்மைச் சேவிக்கும் கைகளும்
உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
அடியார்க்கருளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!