கிருபை புரிந்தெனை ஆள் / Kirubai Purindhenai Aal / Kirubai Purinthenai Aal
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்
1
திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில்நரனாகிய மா துவின் வித்து
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்
2
பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்
3
தந்திரவான்கடியின் சிறைமீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்
4
தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி என்னை உமக்காலயம் ஆக்கி
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்
5
தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்
6
அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
கிருபை புரிந்தெனை ஆள்