கண்டீர்களோ சிலுவையில் / Kandeergalo Siluvaiyil
1
கண்டீர்களோ சிலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
2
மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார் அதை
மறக்கக்கூடுமோ
3
கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்
4
அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவி இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே
5
சீர் கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் யேசுவை
