காட்டு புறாவின் சத்தம் | Kaattu Puraavin Saththam / Kattu Puravin Satham

காட்டு புறாவின் சத்தம் | Kaattu Puraavin Saththam / Kattu Puravin Satham

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்

1
தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே

நீர் எந்தன் நேசர் தானே நீர் எந்தன் நண்பர் தானே
நீர் எந்தன் நேசர் தானே நீர் எந்தன் நண்பர் தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று நான் சொல்லிடுவேன்

உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று

2
கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே

நீரின்றி நானும் இல்லை நீர்தானே எந்தன் எல்லை
நீரின்றி நானும் இல்லை நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடிடுவேன்

உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று

3
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும் இங்கு இல்லையே
பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும் இங்கு இல்லையே

நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே

உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்
உம் வருகை வரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று

காட்டு புறாவின் சத்தம் | Kaattu Puraavin Saththam / Kattu Puravin Satham | A. Johnshny | Sweeton J. Paul | A. Solomon / Jesus Redeems Ministries, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India

காட்டு புறாவின் சத்தம் | Kaattu Puraavin Saththam / Kattu Puravin Satham | Benishaya Bennet | A. Solomon / Jesus Redeems Ministries, Nalumavadi, Thoothukudi, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!