தெய்வ கிருபையைத் தேட / Deiva Kirubaiyai Theda / Theiva Kirubaiyai Theda
(1ஆம் பாகம்)
1
தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக்கொண்டிரு
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப் படு
2
வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு
ஜீவ வழியோ நெருக்கம்
லோக நேசத்தை விடு
3
சேவகத்தில் பின் வாங்காமல்
ராஜ்ஜியத்துக்குட்படு
பேய் எதிர்த்தால் தளராமல்
நின்று ஏகிக்கொண்டிரு
4
வேண்டுதலினால் போராடி
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி
கூப்பிட்டுக் கொண்டேயிரு
5
கர்த்தர் உன்னைத் தயவோடே
ஏற்றுக்கொண்டபிறகு
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு
6
ஜீவனுள்ள நாள்மட்டாக
மோசங்கள் இருக்குமே
திகிலும் பயமுமாக
உன் ரட்சிப்பைக் காப்பாயே
7
நீ முடியைப் பெற்றிருந்தால்
கெட்டியாய்ப் பிடித்திரு
பின்னடைந்து போய் விழுந்தால்
மோசம் மா பெரியது
8
மாய்கையை நோக்காதே விட்டு
ஞான ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து
நிர்விசாரத்தைப் பகை
(2ஆம் பாகம்)
1
இதை நாம் நினைப்போமாக
ஆ நற்சேவகரைப்போல்
பந்தயம் பெறுமட்டாக
ஏகிப்போவோம் வாருங்கள்
2
லோகம் பேயின் வசமாமே
சோதோம் வேகும் அல்லவோ
தப்பிப்போக நேரமாமே
தீவிரிக்க வேண்டாமோ
3
தப்பத்தக்கதாக ஓடு
ஆத்துமாவே தீவிரி
பாரத்தை இறக்கிப் போடு
தெய்வச் சொல்லைக் கவனி
4
அக்ரம சோதோமை விட்டு
அதன் செக்கையை வெறு
தப்பிப்போகத் தீவிரித்து
நல்லொதுக்குக்குட்படு
5
நீ பின்னானதைப நாடாமல்
முன்னிருப்பதைப் பிடி
இச்சை வைத்தழுக்காகாமல்
தெய்வ சிந்தையைத் தரி
6
வென்றவரை மோட்சத்துக்கு
சேர்த்துயர்த்துவதற்கு
வரும் மணவாளனுக்கு
வாஞ்சையாகக் காத்திரு
7
ஓடி அவரைச் சந்தித்து
ஜீவனே முள் காட்டைப்போல்
காணும் இப்புவியை விட்டு
என்னைச்சேரும் என்றுசொல்