கர்த்தாவை நம்புவோரை / Karththaavai Nambuvorai / Karthaavai Nambuvorai / Karththavai Nambuvorai / Karthavai Nambuvorai
கர்த்தாவை நம்புவோரை / Karththaavai Nambuvorai / Karthaavai Nambuvorai / Karththavai Nambuvorai / Karthavai Nambuvorai
1
கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப்போடுவார்
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய்விசாரிப்பார்
2
கர்த்தாவின் சித்தத்துக்கு
கீழ்ப்பட்டடங்குவேன்
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்
லௌகீக வாழ்வின் பாதை
வேண்டாம் நான் இயேசுவை
பின்பற்றி இங்கே வாதை
சகித்தால் மாநன்மை
3
என்மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே
பொறுக்கிற வரத்தை
அவரிடம் கேட்பேன்
அவ்விதமாய் இக்கட்டை
சகித்து வெல்லுவேன்
4
கசப்பும் கர்த்தராலே
வரும் நான் பின்வாங்கேன்
ஜெபத்தில் ஆசையோடே
விண்ணப்பம் பண்ணுவேன்
அப்போது தயவாக
காப்பாரே கைவிடார்
இக்கட்டு பெரிதாக
போம்போது தேற்றுவார்
5
அநேகர் ஆசைகொள்ளும்
பொருளை வாஞ்சியேன்
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப் பொருள் நாடுவேன்
என் பொக்கிஷம் என் செல்வம்
என் ஆஸ்த்தி கிறிஸ்துவே
என் பாக்கியம் பேரின்பம்
எல்லாம் என் மீட்பரே
6
என் இயேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்
எனக்கு ஜீவனாக
ஜெயித்தழும்பினார்
7
இஸ்தோத்திரம் செலுத்த
மிகுந்த நியாயமாம்
ஏன் ஜீவனைக் கொடுத்த
என் கர்த்தருக்கெல்லாம்
ஆதீனமாவதாக
அவருக்கென்றைக்கும்
பணிந்த பக்தியாக
நான் கீழ்ப்படியவும்