ஆண்டவா மேலோகில் உம் / Aandavaa Melogil Um / Aandava Melogil Um
1
ஆண்டவா மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட
நிறைவாம் அருள் பெற
ஜோதி காட்சி காணவும்
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்
2
பட்சிகள் உம் பீடமே
சுற்றித் தங்கிப் பாடுமே
பாடுவாரே பக்தரும்
திவ்விய மார்பில் தங்கியும்
புறாதான் பேழை நீங்கியே
மீண்டும் வந்தாற்போலவே
ஆற்றல் காணா நின் பக்தர்
ஆறிப் பாதம் தரிப்பர்
3
அழுகையின் பள்ளத்தில்
ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்
ஜீவ ஊற்றுப் பொங்கிடும்
மன்னா நித்தம் பெய்திடும்
பலம் நித்தம் ஓங்கியே
உந்தன் பாதம் சேரவே
துதிப்பார் சாஷ்டாங்கமாய்
ஜீவ கால அன்புக்காய்
4
பெற மோட்ச பாக்கியம்
பூவில் வேண்டும் சமுகம்
ரட்சை செய்யும் தயவால்
பாதம் சேர்த்தருள்வதால்
நீரே சூரியன் கேடகம்
வழித் துணை காவலும்
கிருபை மகிமையும்
மேலும் மேலும் பொழியும்