ஆ என்னில் நூறு வாயும் நாவும் / Aa Ennil Nooru Vaayum Naavum / Aa Ennil Nooru Vayum Navum
(1-ஆம் பாகம்)
1
ஆ என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால் கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மையாவும்
அவைகளால் பிரசங்கித்து
துதிகளோடே சொல்லுவேன்
ஓயா தொனியாய்ப் பாடுவேன்
2
என் சத்தம் வானமளவாக
போய் எட்ட வேண்டும் என்கிறேன்
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்
3
ஆ என்னில் சோம்பலாயிராதே
என் உள்ளமே நன்றாய் விழி
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் ஸ்தோத்திரி
ஸ்தோத்திரி என் ஆவியே
ஸ்தோத்திரி என் தேகமே
4
வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே
என்னோடே கூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்
5
கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்
(2-ஆம் பாகம்)
1
பிதாவே தேகம் ஆவி யாவும்
உம்மால் அல்லோ உண்டாயிற்று
சரீர ஈவாம் ஊணுந் தாவும்
நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு
தெரிந்துகொண்ட அன்புமே
மா உபகாரம் கர்த்தரே
2
இயேசு ஸ்வாமி நீர் அன்பாலே
கொடும் பிசாசினுடைய
கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே
விலக்கி நீங்கலாக்கின
ரட்சிப்புக்காக என்றைக்கும்
என் ஆவி உம்மைப் போற்றவும்
3
மெய்யாகத் தேற்றும் தேய்வ ஆவீ
ஆ உமக்குப் புகழ்ச்சியே
உம்மாலே இந்தக் கெட்ட பாவி
இரட்சிப்புக்குள்ளானானே
இங்கென்னில் நன்மை ஏதுண்டோ
அதுமது பயிர் அல்லோ
4
இந்நேரமட்டும் நீர் ரட்சித்தீர்
பலவித இக்கட்டிலே
எப்போதும் என்னை ஆதரித்தீர்
கண்ணார அதைக் கண்டேனே
மா மோசம் வந்தும் எனக்குச்
சந்தோஷ ஜோதித் தோன்றிற்று
5
என் நாவு பேசும் நாள்மட்டாக
என் நெஞ்சையும்மட்டுக்கும்
நான் உமதன்பைப் பூரிப்பாகத்
இஸ்தோத்திரிப்பேன் நித்தமும்
என் வாய் ஓய்ந்தாலும் ஓய்ந்திரேன்
என் உள்ளத்தாலே போற்றுவேன்
6
நான் மண்ணில் பாடும் ஏழையான
துதியை ஏற்றுக் கொள்ளுமேன்
நான் விண்ணில் தூதருக்கொப்பான
பிற்பாடு நன்றாய்ப் போற்றுவேன்
அப்போ நான் வானோர் கும்புடன்
புதிய பாட்டாய்ப் பாடுவேன்
ஆ என்னில் நூறு வாயும் நாவும் / Aa Ennil Nooru Vaayum Naavum / Aa Ennil Nooru Vayum Navum
ஆ என்னில் நூறு வாயும் நாவும் / Aa Ennil Nooru Vaayum Naavum / Aa Ennil Nooru Vayum Navum
ஆ என்னில் நூறு வாயும் நாவும் / Aa Ennil Nooru Vaayum Naavum / Aa Ennil Nooru Vayum Navum
ஆ என்னில் நூறு வாயும் நாவும் / Aa Ennil Nooru Vaayum Naavum / Aa Ennil Nooru Vayum Navum
ஆ என்னில் நூறு வாயும் நாவும் / Aa Ennil Nooru Vaayum Naavum / Aa Ennil Nooru Vayum Navum
