விண் கிரீடம் பெறப் போருக்கு / Vin Kireedam Pera Porukku / Vin Gireedam Pera Porukku
1
விண் கிரீடம் பெறப் போருக்கு
கிறிஸ்தேசு செல்கின்றார்
அவரின் வெற்றிக் கொடிக்கு
கீழாகப் போவோன் யார்
தன் துக்க பாத்திரம் குடித்து
சோராமல் நிற்போன் யார்
தன் சிலுவையை எடுத்து
அவர் பின் செல்வோன் யார்
2
முதலாம் ரத்த சாட்சியாய்
மரித்தோன் வானத்தில்
கர்த்தாவை விசுவாசமாய்
கண்ணோக்கித் துன்பத்தில்
கொலைஞர்க்காக வேண்டிட
சண்டாளரால் மாண்டான்
பகைஞர்க்காக ஜெபிக்க
யார் அவன்பின் செல்வான்
3
தெய்வாவி வந்து தங்கின
ஈராறு சீஷர்கள்
மகத்துவமாய் விளங்கின
நம்பிக்கையுள்ளோர்கள்
தீ துன்பம் வாளைச் சகித்தே
சிங்கத்தால் பீறுண்டார்
மரிக்கவும் அஞ்சாமலே
அவர்போல் செல்வோர் யார்
4
சிறந்த சேனா வீரராய்
கெம்பீரக் கூட்டத்தார்
சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்
கொண்டாடி நிற்கிறார்
எப்பாடும் நீங்கி மோட்சத்தை
சேர்ந்தோர்போல் நாங்களும்
உம்மிடம் சேர அருளை
கர்த்தா கடாட்சியும்
விண் கிரீடம் பெறப் போருக்கு / Vin Kireedam Pera Porukku / Vin Gireedam Pera Porukku