எந்தன் இயேசுவே உந்தன் நேசமே / Endhan Eyesuve Undhan Nesame / Enthan Eyesuve Unthan Nesame / Endhan Yesuve Undhan Nesame / Enthan Yesuve Unthan Nesame
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
1
அந்த மாது கண்களின் நீரை
அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
அந்த மாது கண்களின் நீரை
அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
என் இதயமே தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்
என் இதயமே தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
2
நன்றி என்றும் நான் மறவேனே
நம்பிக்கை கன்மலை என் இறைவா
நன்றி என்றும் நான் மறவேனே
நம்பிக்கை கன்மலை என் இறைவா
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எந்தன் பாரம் தாங்கிடுவீர்
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எந்தன் பாரம் தாங்கிடுவீர்
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
3
கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன்
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
4
எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
ஏதுமில்லை இந்தப் பாரினிலே
எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
ஏதுமில்லை இந்தப் பாரினிலே
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன்
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன்
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
5
இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
ஒன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன்
ஒன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன்
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்
