உம்மை தான் நம்பி | Ummai Than Nambi / Ummai Thaan Nambi

உம்மை தான் நம்பி | Ummai Than Nambi / Ummai Thaan Nambi

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை
உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை
நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே
அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே

உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கப்பட்டு போவதில்லை நான்
வெட்கப்பட்டு போவதில்லை

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

1
நான் போகும் பயணம் தூரம்
யார் துணை செய்திடுவாரோ
யாக்கோபின் தேவன் துணையே
என்னை வழி நடத்திடுவார்

நான் போகும் பயணம் தூரம்
யார் துணை செய்திடுவாரோ
யாக்கோபின் தேவன் துணையே
என்னை வழி நடத்திடுவார்

தடைகள் யாவும் நீக்கி
என்னை வழி நடத்திடுவார்

நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே

நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

2
மாயை நிறைந்த உலகினிலே
நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
எதை நான் சார்ந்து போனாலும்
கானல் நீரைப் போல் மறையுதையா

மாயை நிறைந்த உலகினிலே
நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
எதை நான் சார்ந்து போனாலும்
கானல் நீரைப் போல் மறையுதையா

என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
நல்ல பங்கு நீர் தானையா

இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்

இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

3
பொல்லாப்பு நிறைந்த உலகில்
யார் என்னை காத்திட கூடும்
கர்த்தர் நகரத்தை காவாராகில்
காவலாளியும் விருதாவே

பொல்லாப்பு நிறைந்த உலகில்
யார் என்னை காத்திட கூடும்
கர்த்தர் நகரத்தை காவாராகில்
காவலாளியும் விருதாவே

கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
தீங்கை நான் காண்பதும் இல்லையே

தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்

தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை
உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை
நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே
அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே

உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கப்பட்டு போவதில்லை நான்
வெட்கப்பட்டு போவதில்லை

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா

உம்மை தான் நம்பி | Ummai Than Nambi / Ummai Thaan Nambi | L. Lucas Sekar | Alwyn | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!