யோர்தான் விட்டேறி மனுஷ / Yordhaan Viteri Manusha / Yorthaan Viteri Manusha
1
யோர்தான் விட்டேறி மனுஷ
குமாரன் ஜெபித்தார்
வானின்றப்போதிறங்கின
புறா உருக் கண்டார்
2
நல்லாவி அபிஷேகமாய்
அவர்மேல் தங்கினார்
’என் நேச மைந்தன்’ என்பதாய்
பிதா விளம்பினார்
3
அவ்வாறு ஸ்நானத்தால் புது
பிறப்பை அடைந்தார்
மெய்த் தெய்வ புத்திரர் என்று
விஸ்வாசத்தால் காண்பார்
4
கபடில்லாப் புறாத் தன்மை
தரிக்கப்படுவார்
நல்லாவி தங்கள் உள்ளத்தை
நடத்தப் பெறுவார்
5
உம் ரத்த ஊற்றால் பாவத்தை
நீக்கின கிறிஸ்துவே
தூய்மையோரான தாசரை
தற்காத்துக் கொள்ளுமே
6
சீர்கெட்ட லோகம் மீட்டோரே
பிதா ஆவியையும்
உம்மோடு ஏகராகவே
என்றென்றும் துதிப்போம்