வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் / Vellangi Poondu Maatchiyaai / Vellangi Poondu Maatchiyai
1
வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்
நிற்கும் இப்பாக்கியர் யார்
சதா சந்தோஷ ஸ்தலத்தை
எவ்வாறு அடைந்தார்
2
மிகுந்த துன்பத்தினின்றே
இவர்கள் மீண்டவர்
தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில்
தூய்மையாய்த் தோய்த்தவர்
3
குருத்தோலை பிடித்தோராய்
விண் ஆசனமுன்னர்
செம்ஜோதியில் தம் நாதரை
இப்போது சேவிப்பர்
4
வெம் பசி தாகம் வெய்யிலும்
சற்றேனும் அறியார்
பகலோனாக ஸ்வாமிதாம்
நற்காந்தி வீசுவார்
5
சிங்காசனத்தின் மத்தியில்
விண் ஆட்டுக்குட்டிதாம்
மெய் அமிர்தத்தால் பக்தரை
போஷித்துக் காப்பாராம்
6
நல் மேய்ச்சல் ஜீவ தண்ணீர்க்கும்
அவர் நடத்துவார்
இவர்கள் கண்ணீர் யாவையும்
கர்த்தர்தாம் துடைப்பார்
7
நாம் வாழ்த்தும் ஸ்வாமியாம் பிதா
குமாரன் ஆவிக்கும்
நீடூழி காலமாகவே
துதி உண்டாகவும்