உன்றன் சுயமதியே / Undran Suyamathiye / Undran Suyamathiye / Untran Suyamathiye / Unthan Suya Mathiye
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
1
மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
2
சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
3
துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
4
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
5
நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் அதின்
மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
Like this? Leave your thoughts below...