உம்மை நம்பி வந்தேன் | Ummai Nambi Vanthen / Ummai Nambi Vandhen
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல் எல்லோகே ஏல் எல்லோகே
உம்மைத் துதிப்பேன்
ஏல் எல்லோகே ஏல் எல்லோகே
உம்மைத் துதிப்பேன்
1
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
ஏல் எல்லோகே ஏல் எல்லோகே
உம்மைத் துதிப்பேன்
ஏல் எல்லோகே ஏல் எல்லோகே
உம்மைத் துதிப்பேன்
2
வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
ஏல் எல்லோகே ஏல் எல்லோகே
உம்மைத் துதிப்பேன்
ஏல் எல்லோகே ஏல் எல்லோகே
உம்மைத் துதிப்பேன்
உம்மை நம்பி வந்தேன் | Ummai Nambi Vanthen / Ummai Nambi Vandhen | Ashish / Crown of Life Church, Karungal, Kanyakumari, Tamil Nadu, India | John Jebaraj