உம் அவதாரம் பாரினில் / Um Avadhaaram Paarinil / Um Avadharam Parinil / Um Avathaaram Paarinil / Um Avatharam Parinil
1
உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்
கர்த்தா உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்
2
சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும் திவ்விய வாசகன்
அநாதி ஜோதி ரூபம் நீர்
என்றே தெரிந்துகொண்டனன்
3
கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்
4
உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது
5
சீர் கன்னி மைந்தா இயேசுவே
பூலோக ஜோதியான நீர்
பிதா நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்