தந்தாய் உம்மைத் துதித்தே / Thandhaai Ummai Thudhithe / Thandhai Ummai Thudhithe / Thanthaai Ummai Thuthithe / Thanthai Ummai Thuthithe
1
தந்தாய் உம்மைத் துதித்தே
உந்தன் நாமம் போற்றுவோமே
அற்பர் பாவம் யாவுமே
தற்பரா நீர் மன்னிப்பீரே
தூதரோடும் வேந்தே உம்
பாதம் வீழ்ந்தே சேவிப்போம்
2
வான சேனையாருமே
மோன தூய பக்தரோடும்
கேரூப் சேராப் கோஷ்டிகள்
சேரும் உந்தன் நாமம் போற்ற
தூய தூயரே உம்முன்
தாழ்ந்து வீழ்ந்து பாடுவார்
3
தூய வானோர் போற்றிடும்
தூய தூய தூய கர்த்தா
மாந்தர் யாரும் பாடிடும்
வேந்தர் மீட்பர் உம் தயாளம்
அன்பு யார்க்கும் ஈவதால்
நன்றியோடு ஏற்றுவோம்
4
உந்தன் சமாதானமே
எந்தத் தேசம் தன்னில் ஊன்ற
யுத்தம் பகை ஓய்ந்திட
அத்தன் அன்பால் மாந்தர் கூட
வீழ்வார் உந்தன் பாதமே
தாழ்வார் உந்தன் நாமத்தில்
5
தந்தை சுதன் ஆவிக்கே
எந்த நாளும் மேன்மை ஸ்துதி
ஆதரிக்கும் மூர்த்தியே,
பாதம் வீழ்ந்து சர் நாங்கள்
அன்பா உந்தன் மா அன்பை
என்றும் என்றும் ரூபிப்போம்
ஆமேன்
