சேதம் அற யாவும் வர / Sedham Ara Yaavum Vara / Sedham Ara Yavum Vara
சேதம் அற யாவும் வர / Sedham Ara Yaavum Vara / Sedham Ara Yavum Vara
1
சேதம் அற யாவும் வர
கர்த்தர் ஆதரிக்கிறார்
காற்றடித்தும் கொந்தளித்தும்
இயேசுவை நீ பற்றப்பார்
2
இயேசு பாரார் அவர் காரார்
தூங்குவார் என்றெண்ணாதே
கலங்காதே தவிக்காதே
நம்பினோனை விடாரே
3
கண்மூடாத உறங்காத
உன் கர்த்தாவைப் பற்றி நீ
அவர்தாமே காப்பாராமே
என்று அவரைப் பணி
4
உன் விசாரம் மா விஸ்தாரம்
ஆகிலும் கர்த்தாவுக்கு
நீ கீழ்ப்பட்டு கிலேசமற்று
அவருக்குக் காத்திரு
5
தெய்வ கைக்கும் வல்லமைக்கும்
சகலமும் கூடாதோ
எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்
அவரால் அறும் அல்லோ
6
சீரில்லாத உன் ஆகாத
மனதுன்னை ஆள்வது
நல்லதல்ல அதற்கல்ல
கர்த்தருக்குக் கீழ்ப்படு
7
கர்த்தர் தந்த உன்மேல் வந்த
பாரத்தைச் சுமந்திரு
நீ சலித்தால் நீ பின்னிட்டால்
குற்றம் பெரிதாகுது
8
ஆமேன் நித்தம் தெய்வ சித்தம்
செய்யப்பட்ட யாவையும்
நீர் குறித்து நீர் கற்பித்து
நீர் நடத்தியருளும்