viṇṇil

தூதாக்கள் விண்ணில் பாடிய / Dhoodhargal Vinnil Paadiye / Thoodhargal Vinnil Paadiye

1         
தூதாக்கள் விண்ணில் பாடிய
தயாபரருக்கே
துதி செலுத்து சகல
நரரின் கூட்டமே

2        
மா செயல்களைச் செய்கிற
பராபரனைப் போல்
ஆர் என்றவரை உத்தம
கருத்தாய்ப் போற்றுங்கள்

3        
இந்நாள் வரைக்கும் நமக்கு
சுகம் அருளினார்
நீங்கா இக்கட்டைத் தமது
கரத்தால் நீக்கினார்

4        
நாம் செய்திருக்கும் பாவத்தைப்
பாராதிருக்கிறார்
தெய்வீக ஆக்கினைகளை
அன்பாய் அகற்றினார்

5        
இனியும் நாம் மகிழ்ச்சியாய்
இருக்கச் சகல
தீங்கையும் அவர் தயவாய்
விலக்கியருள

6        
புவியில் சமாதானத்தை
அவர் தந்தென்றைக்கும்
அன்பாய் நாம் செய்யும் வேலையை
ஆசீர்வதிக்கவும்

7        
நம்மோடே அவர் தயவாய்
இருந்து துக்கமும்
வியாகுலமும் தூரமாய்
விலகப்பண்ணவும்

8        
நாம் சாகுமட்டுக்கும் கர்த்தா
நாம் தங்கும் கோட்டையும்
நாம் சாகும்போது நம்முட
கதியுமாகவும்

9        
பிரிந்துபோகும் ஆவியை
மோட்சானந்தத்திலே
அவர் சேர்த்ததைத் தம்மண்டை
மகிழ்ச்சியாகவே

Don`t copy text!