vedanayagam

வானம் பூமியோ / Vaanam Bhoomiyoo

காரணமோ மானிடர் கண்காட்சியோ சொல்லுகின்ற
ஆரணமோ என்ன அதிசயமோ பூரணமே
ஆனதெல்லாஞ் செய்த அனாதியாயிருப்பதற்கு

வானமோ மாட்டுக் குடில்
வானமோ மாட்டுக் குடில்
வானமோ மாட்டுக் குடில்

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ என்ன இது
வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ என்ன இது

ஞான வான்களே நிதானவான்களே
ஞான வான்களே நிதானவான்களே என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

1
பொன்னகர சாளும் உன்னதமே நீளும்
பொன்னகர சாளும் உன்னதமே நீளும்
பொறுமை கிருபாசனத்துரை
பொறுமை கிருபாசனத்துரை
பூபதி வந்ததேததிசயம் ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

2
சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன்
சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன்
நித்திய பிதாவினோர்
நித்திய பிதாவினோர்
மகத்துவக் குமாரனோ இவர் ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

3
அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன்
அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன்
வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன்
வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன்
கற்பனைத்தந்தவன் ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

4
மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

5
வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல
வேறே பேரல்ல சுரர் விண்ணவ ராருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லிற் கிடக்கிறார் ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

6
சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே
சீயோனின் மாதேயினிச் செணந் தரியாதே
மாயமென்ன வுனக்குச் சொல்லவோ
மாயமென்ன வுனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

7
ஆதாமின் குலமே யிதானாலும் புதுமை
ஆதாமின் குலமே யிதானாலும் புதுமை
வேதநாயகன் பாட்டுப் பார்த்தது
வேதநாயகன் பாட்டுப் பார்த்தது
மேசியாவின் விளையாட்டுக் கேர்த்தது ஆ என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ
வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ என்ன இது

ஞான வான்களே நிதானவான்களே
ஞான வான்களே நிதானவான்களே என்ன இது

வானம் பூமியோ பராபரன்
மானிடனானாரோ

வானம் பூமியோ / Vaanam Bhoomiyoo | Vedanayagam Sastriar | Sarah Martin

Don`t copy text!